Wednesday, March 18, 2009

வான்மீகியின் இயற்பெயர் தெரியுமா உங்களுக்கு?

இந்தியாவில் முதலில் தோன்றிய காப்பியம் "இராமாயணம்". இந்த இராமாயணத்தை வடமொழியில் இயற்றியவர்தான் வான்மீகி என்பது யாவரும் அறிந்ததே.
 
கல்வி, இறைவழிபாடு, ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய வான்மீகி தவவாழ்க்கை மேற்கொண்டார். தவவாழ்க்கை மேற்கொண்ட வான்மீகி, இருந்த இடம் விட்டு நீங்காமல் நெடுங்காலம் தவம் புரிந்தார். அவ்வாறு தவம் புரிந்ததால், அவர் இருந்த இடத்தில் அவரைச் சுற்றிக் கரையான் புற்று தோன்றி வளர்ந்தது. வளர்ந்து அவரது உடலையே மறைத்துவிட்டதாம்.
 
அவ்வாறு தவம் புரிந்த வான்மீகி, தம் தவத்தை முடித்துக் கொண்டு அக்கரையான் புற்றிலிருந்து வெளியே வந்தார். வடமொழியில் வான்மீகம் என்பது கரையான் புற்றைக் குறிக்குமாம்.
 
கரையான் புற்றிலிருந்து வெளியே வந்த காரணத்தால் அவருக்கு வான்மீகி என்று பெயர் உண்டாயிற்று.
 
இக்காரணப் பெயர் தோன்றி வழங்கி வரவே, அவருடைய இயற்பெயர் அறிய முடியாத அளவிற்கு மறைந்து விட்டது.
 
இயற்பெயர் என்னவென்றே தெரியாமல்போய், காரணப் பெயரே ஒருவருக்கு இயற்பெயரானதை எண்ணி இன்றும் உலகம் வியக்கிறது.
 
 
-செந்துறை முத்துவின் 'காப்பியம் பிறந்த கதை' நூலிலிருந்து.

0 comments: